Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்த இளைஞர் தற்கொலை.. திருமணமான மறுநாளே சோகம்..!

Mahendran
வியாழன், 4 ஏப்ரல் 2024 (12:37 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக 5 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உயிரிழந்த ராதாகிருஷ்ணனும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் சென்று புகாரளிக்க, நேற்று காவல் நிலைய வாசலில் உள்ள கோயிலில் இருவருக்கும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 
தனக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகக் கூறி, பெண்ணின் உறவினர்கள் 5 பேரின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments