Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது சிறுமியின் தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமி: போலீசில் பிடித்து கொடுத்த மனைவி

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (08:53 IST)
மதுபோதை தலைக்கேறி 13 வயது சிறுமியின் தலையை தனியாக வெட்டி தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமியால் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி என்ற கிராமத்தில் சாமுவேல்-சின்னப்பொண்ணு என்ற தம்பதியின் மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை அதே பகுதியில் உள்ள கார்த்தி என்ற 27 வயது அடிக்கடி சில்மிஷம் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று முழு குடிபோதையுடன் ராஜலட்சுமி தனியாக இருந்த நேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய கார்த்தி முயன்றுள்ளார். இதனால் ராஜலட்சுமி கூச்சலிட்டார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கார்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜலட்சுமியின் தலையை தனியாக வெட்டி போதையுடன் தெருவில் நடந்தார். இந்த கொடூர சம்பவத்தை பார்த்த அந்த பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தியின் மனைவி உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து தனது வீட்டில் மறைந்திருந்த கணவரை பிடித்து கொடுத்தார். தற்போது ராஜலட்சுமியின் தலை மற்றும் உடலை கைப்பற்றிய போலீசார், கார்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்