Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சித் தேர்தல்… ஏலம் விடப்பட்ட தலைவர் பதவி – கொலையில் முடிந்த விபரீதம் !

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (14:16 IST)
விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான சீட் ஏலம் விடப்பட்டதை எதிர்த்துக் கேள்விகேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் அதிமுக பிரமுகரை போட்டியின்றி தேர்வு செய்வதாக முடிவெடுத்துள்ளனர். இதை அதேப் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்ற சதீஷ்குமாரை ஒரு சிலர் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார், சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. வழக்குப் பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர், அதிமுகவைச் சேர்ந் ராமசுப்பு மற்றும் சுப்புராஜ், முத்துராஜ், செல்வராஜ் ஆகிய 4 பேர் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments