Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வேகமே என்னைக் கொல்லும்… நீங்கள் யாரும் அழவேண்டாம் – விபத்தில் இறந்த மாணவனின் பைக் வாசகம் !

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (09:05 IST)
கடலூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதிவேகமாக சென்று பனைமரத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் தனது நண்பரோடு கடலூருக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக அவர் சென்றுள்ளார். இதனால் சின்னாடிக்குழி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மீது மோதியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் உயிரிழக்க, அவரது நண்பர் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷின் பைக்கை கைப்பற்றிய போலிஸார் அதில் ‘எனது வேகம் ஒரு நாள் என்னைக் கொல்லும். அதனால் அழுகாதீர்கள் சிரியுங்கள்’ என வாசகம் எழுதியுள்ளதைக் கண்டனர். அவரின் சொல்லே இப்போது நிஜமாகியிருப்பதை நினைத்து புலம்பிச்சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments