Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை அடைத்து வைத்துக் கொடுமை செய்த பெற்றோர் - காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு !

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (12:12 IST)
சேலம் மாவட்டத்தில் தனது மகளின் காதலைப் பிரிக்க நினைத்த பெற்றோர் மகளை வீட்டிலேயே அடைத்துக் கொடுமைப் படுத்தியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புள்ளாகவுண்டம்பட்டியில் வசிக்கும் இளைஞர் ரவிஷங்கர். இவருக்கும் அப்பகுதியில் வசித்து வந்த ஒருப் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலை அறிந்த  பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் பெண்ணை வீட்டிலேயே போட்டு அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பலமுறை ரவிஷங்கர் தனது காதலியைப் பார்க்கசென்ற போதும் அவரை பார்க்கவிடாமலும் உறவினரகளை ஒன்றுதிரட்டி அடித்தும் மிரட்டியும் விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரவிஷங்கர் செல்போன் டவர் மேல் ஏறி அங்கிருந்து கீழேக் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் வாட்ஸ் ஆப்பில் தனது காதலியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை குறித்துப் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments