Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழியில் செல்லும் பெண்களை தொடர்ந்து கேலி செய்த வாலிபர் கைது

வழியில் செல்லும் பெண்களை தொடர்ந்து கேலி செய்த வாலிபர் கைது
, புதன், 13 ஜூலை 2016 (18:05 IST)
வழியில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்த சேர்நத சங்கர் [35] என்பவர், சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோரை சீண்டியுள்ளார். ஆனாலும், தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் தர தயங்கியுள்ளனர்.
 
இதனால், மேலும் மேலும் தொடர்ந்து, மாலை நேரங்களில் அங்கு தனியாக வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், ஓட்டப்பாறையை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம், அந்த வாலிபர் தகாத செயலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது, அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் சங்கரை பிடித்துள்ளனர்.
 
சங்கீதா அளித்த புகாரின்படி சென்னிமலை காவல் துறையினர், சங்கரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரை மூன்று நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி