Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"தம்பி உன்பேரு தருண்விஜய்" - நன்றி மறக்காத தமிழ் தம்பதிகள்

"தம்பி உன்பேரு தருண்விஜய்" - நன்றி மறக்காத தமிழ் தம்பதிகள்

, வியாழன், 9 ஜூன் 2016 (17:34 IST)
தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு தருண்விஜய் என்று பெயர் வைத்து அசத்தியுள்ளனர் கும்பகோணத்தைச் சேர்ந்த தம்பதிகள்.
 

 
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண்விஜய். தமிழ்மொழி மீது ஆர்வம் கொண்டவர். தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் நாடு முழுவதும் பரப்ப குரல் கொடுத்து வருகிறார்.
 
வட மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பியின் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர். மேலும், திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் மிகுந்த காதல் கொண்டவர். அவரது தமிழ் பற்று தமிழக மக்களிடம் மிருந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில்,  கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்-சதீஷா என்ற தம்பதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பாஜக எம்பி தருண்விஜய் பெயரை சூட்டி மகிழ்ந்தனர். இந்த தகவலை தருண் விஜய்க்கு கடிதம் மூலம் எழுதி தெரிவித்தனர்.
 
இதை கேள்விப்பட்ட தருண்விஜய் உள்ளம் மகிழ்ந்து, அந்த தம்பதிகளுக்கும், குழந்தைக்கும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து நன்றியை கடிதம் மூலம் அனுப்பிவைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பரோலில் விடுவிக்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை