Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முதலமைச்சராக வேண்டும்... என்னை விட நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும்: சரத்குமார்

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (10:13 IST)
விருதுநகரில் நடைப்பெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார்,  நான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஏனென்று கேட்டால், என்னை விட, என்னால் ஒரு நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும் என்று கூறினார்.


 

 
விருநகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாநில அரசு சிறந்த வகையில் கையாண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் பொறுமையாக சிறப்பாக செயல்படுகிறார். மாணவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
 
 நான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஏனென்று கேட்டால், என்னை விட, என்னால் ஒரு நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும். இளைஞர்களை அரசியலுக்கு வாருங்கள்.. வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோமே, அவர்களில் இருந்து ஒருவர் முதலமைச்சரானால் பெருமைப்படுவோம், என்றார்.
 
சமக தலைவர் சரத்குமார் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரையும் பாராட்டியுள்ளார், மாணவர்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றும் கூறியுள்ளார். தான் முதலமைச்சராக வேண்டும் என்று குறிப்பிட்ட சரத்குமார், இளைஞர்களில் ஒருவரை நல்ல முதலமைச்சராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments