Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுதிய வாலிபர் கைது

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (10:04 IST)
9 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுதிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், அவரது தாயை தேடிவருகின்றனர்.


 
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டுலுப்பட்டியைச் சேர்ந்த மலைராஜா மற்றும் சாவித்திரி தம்பதியரின் 13 வயது மகள் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் பள்ளிக்குச் சென்றுவரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தவக்காசெல்வம், மாணவியை பின்தொடர்ந்து தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து தவக்காசெல்வத்தின் பெற்றோரிடம் மாணவியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் தவக்காசெல்வத்தின் தாய் வைரமணி தன்னுடைய மகனை கண்டிக்காமல், காதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவியிடம், திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாக தவக்காசெல்வம் அவரது தாயும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, சாவித்ரி அளித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர், தவக்காசெல்வத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது தாய் வைரமணியைத் தேடிவருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments