Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதியவருடன் உல்லாசம்: ஐஸ்கிரீம் கடையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!!

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (15:57 IST)
சேலத்தில் இளம்பெண்ணின் தகாத உறவால் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த ஷரீன் சித்தா என்ற இளம்பெண் அதே பகுதியில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. 
 
இந்நிலையில் ஷரீன் சித்தாவுக்கு இனாமுல்லா என்ற முதியவர் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ஷ்ரீன் வீட்டார் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். அதனால் ஷரீன் இனாமுல்லாவுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
 
இதனால் கோபமடைந்த இனாமுல்லா ஷரீன் வேலை செய்யும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் இனாமுல்லா ஷரீனை குத்தி கொலை செய்துள்ளார். அந்நேரம் கடையில் யாரும் இல்லாததால் ஷரீனை யாரும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இனாமுல்லாவும் அதே கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments