Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாய்க்குட்டியை மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொலை செய்த சைகோ : அதிர்ச்சி வீடியோ

நாய்க்குட்டியை மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொலை செய்த சைகோ : அதிர்ச்சி வீடியோ
, செவ்வாய், 5 ஜூலை 2016 (11:52 IST)
ஒரு வாலிபர் ஒரு நாய்க்குட்டியை மாடியிலிருந்து தூக்கி போட்டு கொலை செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.


 

 
அந்த வாலிபர் சென்னையை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அவரின் வீடு சென்னை புறநகர் பகுதியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொட்டை மாடியில் இருக்கும் அவர், அந்த நாய்க்குட்டியை மெதுவாக தூக்கி போடுகிறார். அதை ஒருவர் வீடியோவும் எடுக்கிறார்.
அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்த நாய் குட்டி, வலியால் துடிக்கும் சத்தமும் கேட்கிறது.
 
குரூர மனநிலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இன்று தனியார் தொலைகாட்சிகளும் ஒளிபரப்பியது. இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 
 
அந்த வாலிபரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அறிவித்துள்ளார். அந்த வாலிபரின் புகைப்படம் தெளிவாக தெரிவதால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவுதி அரேபியாவில் மூன்று இடங்களில் தற்கொலை படை தாக்குதல்: 4 பேர் பலி