Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செத்துப் போன மாதிரி நடிக்கிறான் : சுடப்பட்டவரிடம் போலீசார் நக்கல் : அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 23 மே 2018 (15:50 IST)
தூத்துக்குடியில் இன்று துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் அருகில் போலீசார் நின்று கொண்டு பேசும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் போராட்டம் நடத்திய போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் பலியானதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், தூத்துக்குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே இன்று காலை மீண்டும் மோதல் ஏற்பட்டதாகவும், பொதுமக்கள் கல்வீசி தாக்கியதை தொடர்ந்து காவல்துறையினர் ரப்பர் குண்டு மூலம் சுட்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் காளியப்பன் என்ற ஒரு வாலிபர் மரணமைடந்துள்ளார். அவரின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
 
இந்நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே கிடக்கும் காளியப்பனை சுற்றி போலீசார் நிற்கின்றனர். அப்போது, அவரின் உடல் லேசாக அசைகிறது. எனவே,  அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் ‘செத்துப் போன மாதிரி நடிக்கிறான். விடு..’ என அலட்சியமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments