Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் : கரூர் அருகே பரபரப்பு

காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் : கரூர் அருகே பரபரப்பு

காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் : கரூர் அருகே பரபரப்பு
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (12:28 IST)
கரூரில் மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

 
கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமாக்கவுண்டனூர் அருணாச்சல நகர் பகுதியில் மர்மமான முறையில் கார் நேற்று முதல் நின்று கொண்டிருப்பதாகவும், அதில் இளைஞர் உடல் இருப்பதாகவும் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியை சார்ந்த கார்த்திகேயன் என்பதும் வாடகை கார் ஓட்டுநரான அவர் நேற்று இரவு மது போதையில் அந்த பகுதியில் சுற்றுக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்தது.
 
இதனையடுத்து உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இறந்து போன கார்த்திகேயனுக்கு ராதா என்ற மனைவியும், 2 மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வாயில் நுரை தள்ளிய நிலையில் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்: போர்ப்ஸ் பத்திரிகை வெளியீடு