Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரேனின் மேல் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (14:56 IST)
அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் கிரேன் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது உடல்நிலை சரியில்லாததால் சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அண்ணாமலைக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காதால் வேதனையுற்ற அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ராயப்பேட்டையிலுள்ள ஈ.ஏ.வணிக வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுமார் 75 மீட்டர் உயரமுள்ள கிரேன் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் நீண்ட நேரம் போராடி அண்ணாமலையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனால் அந்த பகுதி சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments