Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு
, செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (11:31 IST)
17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிராக்டர் ஓட்டுனருக்க ஆயுள் தண்டனை வழங்கி ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினாரை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அசுவத்.  டிராக்டர் ஓட்டுநரான இவருக்கு வயது 29.
 
அசுவத் கடந்த இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை வீடு புகுந்து பாலியல் பாலாத்காரம் செய்தார்.
 
இந்த சம்பவம் குறித்து தாளவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி, அசுவத்தை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அசுவத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பப்பட்டது. 
 
இந்த அபராத கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபரிக்கவேண்டடும் என்று நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil