Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

Mahendran
சனி, 26 அக்டோபர் 2024 (15:50 IST)
தமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதை அடுத்து, ஐந்து மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

 வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவையிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மதுரையில் மிக அதிகமான மழை பெய்ததால், மதுரை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று கூறி, வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நவம்பர் 1 வரை தமிழகத்தில் உள்ள சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் பிரபலங்கள் யார் யார்? கசியும் ரகசியங்கள்..!

வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மாநகரம்.. தமிழக அரசின் தோல்வியே காரணம்: டாக்டர் ராமதாஸ்

தொப்புள் கொடி விவகாரம்: வருத்தம் தெரிவித்த கடிதத்தை சமர்ப்பித்த இர்ஃபான்

மதுரையை புரட்டி எடுத்த கனமழை! எடுத்த நடவடிக்கைகள் என்ன? - மு.க.ஸ்டாலின் பதிவு!

நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments