தமிழகத்தில் கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (12:03 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி இராமநாதபுரம் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அதேபோல் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை இலங்கையில் கரையை கடந்த நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரந்தர் 2-வால் பாகிஸ்தானில் பீதி!.. தெருதெருவாக உளவாளிகளை தேடும் போலீஸ்!...

தனித்து களமிறங்கும் விடுதலை சிறுத்தை!.. திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை!..

போர் நின்றாலும் தங்கம் விலை உயரவில்லை.. இன்றும் சரிவு.. சென்னை நிலவரம்..!

டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம்..!

14.2 கிலோ சிலிண்டருக்கு பதில் இனிமேல் 10 கிலோ சிலிண்டர் தானா? பொதுமக்கள் அதிருப்தி?

அடுத்த கட்டுரையில்
Show comments