ஒரு கிராமம் முழுக்கவே பிழையான ஸ்மார்ட் கார்ட்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (06:00 IST)
ரேசன் கார்டுக்கு பதிலாக தமிழக அரசு வழங்கி வரும் ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் உள்பட பல புகைப்படங்கள் மாறி மாறி இருப்பது குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு கிராமம் முழுக்கவே பிழையான ஸ்மார்ட்கார்ட் வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது



 
 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை என்ற கிராமத்தை சேர்ந்த சுமார் 360 பேர்களின் ஸ்மாட்கார்டுகளில் மேலப்பசலை என்பதற்கு பதிலாக மேலப்பிடாவூர் என்கிற முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கிராமத்து மக்கள் ஸ்மார்ட்கார்டை வாங்க மறுத்துவிட்டனர்.
 
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறியபோது, 'ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் குறைந்துவிட்டது. உளுந்து வழங்வது இல்லை. சீனி, அரிசி பாமாயில் எதுவுமே மாதந்தோறும் வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் சிவப்பு கலர் பருப்பு போடுறாங்க. அந்தப் பருப்பைச் சாப்பிட்டால் மூட்டுவலி வருமாம். ஆக எங்களுக்கு எந்தப் பொருளும் ஒழுங்காக வழங்காத நிலையில் ஸ்மார்ட் கார்டு இப்படி வழங்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று ஆதங்கத்துடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments