உலக மகளிர் தினம் - அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:02 IST)
இன்று உலக முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித்  தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயபுரத்திலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செலவம் ,  துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பெண் கட்சி நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டிவிட்டனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா  இருவரும் சசிகலாவை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்  பன்னீர்செல்வமும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments