Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு.. கோலாகல ஏற்பாடு!

Mahendran
சனி, 24 ஆகஸ்ட் 2024 (08:24 IST)
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதை அடுத்து இந்த மாநாட்டிற்கு தமிழக அரசு கோலாகல ஏற்பாடு செய்துள்ளது.

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்டில் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன!

மேலும் முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன!

இந்த மாநாட்டின் தொடக்கமாக இன்று காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் ஏற்றி வைக்கிறார்.

மேலும் அமைச்சர் பெரியசாமி  கண்காட்சியை தொடங்கி வைக்க, அமைச்சர் சக்கரபாணி முன்னிலை வகிக்கும் இந்த மாநாட்டில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம்,  செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்மாநாட்டை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments