Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் வெளியேற்றம்: கோவையில் பரபரப்பு!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (12:37 IST)
கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் வெளியேற்றம்
கோவை அருகே திமுக தலைவர் முக ஸ்டாலின் நடத்திய கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் கேள்வி கேட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களில் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். அவ்வாறு கோவை மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் என்ற பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார் 
 
இந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசுவது துவங்கும் முன் பெண் ஒருவர் எழுந்து இந்த ஊரின் பெயர் என்ன எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முக ஸ்டாலின் கூறிய சர்ச்சைக்குரிய பதிலால் அந்த பெண் ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? என அப்பெண் பதில் கேள்வி கேட்டார்
 
இந்தப் பெண்ணின் கேள்வியால் அந்த கிராமசபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் அந்த பெண்ணை வெளியேறியதாக தெரிகிறது. கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் ஒருவரை திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையிலேயே வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments