Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் வெளியேற்றம்: கோவையில் பரபரப்பு!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (12:37 IST)
கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை கேள்வி கேட்ட பெண் வெளியேற்றம்
கோவை அருகே திமுக தலைவர் முக ஸ்டாலின் நடத்திய கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் கேள்வி கேட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களில் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். அவ்வாறு கோவை மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் என்ற பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார் 
 
இந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசுவது துவங்கும் முன் பெண் ஒருவர் எழுந்து இந்த ஊரின் பெயர் என்ன எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முக ஸ்டாலின் கூறிய சர்ச்சைக்குரிய பதிலால் அந்த பெண் ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? என அப்பெண் பதில் கேள்வி கேட்டார்
 
இந்தப் பெண்ணின் கேள்வியால் அந்த கிராமசபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் அந்த பெண்ணை வெளியேறியதாக தெரிகிறது. கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண் ஒருவரை திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையிலேயே வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments