சேலம் அருகே கோட்டை மாரியம்மன் கோயில் கருவறையை இடிப்பதைக் கண்டித்து, பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் கருவறையை இடிப்பதைக் கண்டித்து, பெண்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் இரண்டு பெண்கள் சாமி ஆடினர். டேய் இங்கு 500 வருஷமா இருக்கேன்டா, இடிடா பார்க்கலாம் என்ற குரலோடு சாமி ஆடினர்.
இந்தக் கோயிலை இடித்து அதை விரிவுப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இருப்பினும் கருவறையை இடிக்கக் கூடாது என்று பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.