Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை வம்பு செய்த ரௌடி; போலீஸை கண்டதும் தலைமறைவு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:26 IST)
சேலத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த ரௌடி பெண்களிடம் ரகளை செய்ததால் பெண்கள் போராட்டத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வீராணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்சல். அந்த பகுதியில் பிரபல ரௌடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் ஒரு வழக்கில் சிறை சென்ற இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் பொன்னம்மாபேட்டை திப்பு நகர் பகுதியில் மது அருந்திவிட்டு நின்றுகொண்டிருந்த அப்சல் அப்பகுதி வழியாக சென்ற பெண்களிடம் அருவருக்கத்தக்க வகையில் பேசி வம்பு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே சாலையை மறித்து அப்சலுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு போலீசார் வருவதற்குள் உஷாரான ரௌடி அப்சல் தலைமறைவாகியுள்ளான். இந்நிலையில் அப்பகுதி வந்த போலீஸார் அப்சலை பிடிப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பெண்கள் கலைந்து சென்றுள்ளனர். பிரபல ரௌடிக்கு எதிராக பெண்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது: ஆர்எஸ் பாரதி

கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments