Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் ரெளடி: சென்னையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (11:20 IST)
சென்னையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை பெண் ரவுடி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை தாம்பரம் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற திமுக பிரமுகருக்கும் அதே பகுதியை சேர்ந்த லோகம்மாள் என்ற பெண் ரெளடிக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது
 
அந்த வகையில் நேற்று மாலை மீண்டும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு நடந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திமுக பிரமுகர் சதீஷை, லோகம்மாள் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் பெண் ரவுடி லோகம்மாள் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments