Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பெண்ணின் நிலமை ஐயோ பரிதாபம்!

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பெண்ணின் நிலமை ஐயோ பரிதாபம்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (09:38 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மாரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


 
 
இதனையடுத்து அவரது சமாதியை தினமும் தமிழகம் முழுவதிலும் இருந்தும் பலர் கூட்டம் கூடமாக வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் எம்ஜிஆரி சமாதி உள்ள அந்த இடத்தில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பெண் ஒருவர் அந்த வளாகத்தில் இருந்த புல் தரையில் நடந்து வந்துள்ளார். அப்போது அதில் மின்சார ஒயர் ஒன்று கிடந்ததை கவனிக்காமல் அதை மிதித்துள்ளார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
 
உடனடியாக காவல்துறையினர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
புல் தரையில் மின்சார ஒயரை பாதுகாப்பில்லாமல் போடப்பட்டிருப்பதால் அங்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments