பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு? ஆசை காட்டி மோசடி! – யூட்யூப் சேனல் மீது புகார்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (09:25 IST)
பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக மோசடி செய்த யூட்யூப் சேனல் மீது பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவையை சேர்ந்த சரளாதேவி என்பவர் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி கோதை நாச்சியார் என்பவர் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் விளம்பரங்கள் செய்துள்ளார். நாப்கின், மெழுகுவர்த்தி போன்றவை செய்ய பயிற்சி அளிப்பதாகவும், எந்திரங்கள் வாங்கி தருவதாகவும் கூறி பயிற்சிக்கு முன்பணம் செலுத்த சொல்லியுள்ளார்.

அவர் குறிப்பிட்ட எண்ணுக்கு பலரும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு அந்த பெண்ணின் எண் ஸ்விட்ச் ஆப் ஆனதுடன், யூட்யூப் வீடியோக்களும் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் மோசடி செய்த பெண் மீது யூட்யூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments