Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த கோட்டை தாண்டி வந்தா… - கோடு போட்டு தாண்டும் குடிமகன்கள்!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (15:03 IST)
கேரள மாநிலத்தில் மதுக்கடைகளில் வாங்க வருபவர்கள் இடைவெளி விட்டு நிற்பது போல தமிழகத்திலும் கட்டம் கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து வரும் கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் இடைவெளியை காக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் மதுக்கடைகளில் மது வாங்க வருபவர்கள் வரிசையில் நிற்கவும், வரிசைக்கு இடையே போதிய இடைவெளியை நீடிக்கவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் அதே முறை நடைமுறைக்கு வந்துள்ளது. போதிய இடைவெளிகளில் வரிசையாக கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ஒரு கட்டத்திலிருப்பவர் அடுத்த கட்டம் நகர்ந்ததும், பின்னால் இருப்பவர் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது விரும்பிகள் நீண்ட நேரம் பல கட்ட தாண்டல்களுக்கு பிறகு மதுவை வாங்கி செல்கின்றனர். சமூக இடைவெளியை பேண மதுக்கடைகளில் செயல்படுத்தியுள்ள இந்த நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments