Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசிகவுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்குமா? ஏமாற்றமா?

Sinoj
சனி, 2 மார்ச் 2024 (15:02 IST)
திமுக கூட்டணியில் உள்ள விசிக உடனான 2 ஆம் கட்ட  பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியாகிறது.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த   நிலையில், தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
 
இந்த  நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  மதிமுக, மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன்  தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
அதன்படி, திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  2 தனி தொகுதிகளும்,  1 பொதுத்தொகுதியும் கேட்டப்பட்ட நிலையில்,  திமுக தரப்பில் 2 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், 2 ஆம் கட்ட  பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments