Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா.? நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!!

Senthil Velan
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (11:37 IST)
15வது ஊதிய குழு உட்பட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
 
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய குழுவை அமைக்க வேண்டும், நிலுவையில் இருக்க கூடிய ஓய்வு பெற்றவர்களுக்கான 96 மாத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படியை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து 4 கட்டங்களாக நடைபெற்றிருந்தது. 4 கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது
 
இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: தமிழக மீனவர்களுக்கு சிறை..! ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை மீனவர்கள் பேரணி..!!

நாளை மதியம் 3 மணி அளவில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments