Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ நா அழைப்பை ஏற்றுப் பங்கேற்பாரா ஸ்டாலின் ? – இடைத்தேர்தல் நெருக்கடி !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:15 IST)
.நா. மனித உரிமை ஆணையத்தில், 42வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று துவங்கவுள்ள நிலையில் அதில் ஸ்டாலின் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், 42வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேச ஐநா மனித உரிமைகள் ஆணையம்  அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு அவர் அழைக்கப்பட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த நிலையில் கடைசி நேரத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments