Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா உறவினர்களால் முதல்வர் ஓபிஎஸ் தாக்கப்பட்டாரா?

சசிகலா உறவினர்களால் முதல்வர் ஓபிஎஸ் தாக்கப்பட்டாரா?

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (16:23 IST)
தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி கட்டாயப்படுத்தப்பட்டதாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில் ராஜினாமா கடித்தத்தில் கையெழுத்து பெறுவதற்காக சசிகலாவின் உறவினர்களால் ஓபிஎஸ் தாக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.


 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தான் சசிகலா உறவினர்களால் மிரட்டப்பட்டதாகவும், அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் பன்னீர்செல்வம்.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவரை சசிகலா உறவினர்கள் தாக்கியுள்ளார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது. தான் அவர்களால் தாக்கப்பட்டதாக எங்குமே கூறவில்லை ஓபிஎஸ். ஆனால் ஓபிஎஸ் தாக்கப்படவில்லை என சசிகலா தரப்பில் உள்ள முன்னணி தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து கூறிவருவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் தங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் பல உண்மைகளை சொல்ல வேண்டிவரும் என பன்னீர்செல்வம் சசிகலா தரப்பிற்கு எச்சரிக்கை விடுத்திருப்பதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments