Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜார்ஜ்க்கு டி.ஜி.பி பதவி உயர்வா?

ஜார்ஜ்க்கு டி.ஜி.பி பதவி உயர்வா?
, வியாழன், 2 மார்ச் 2017 (05:11 IST)
சென்னை மாநகர கமிஷனராக பணிபுரிந்து வரும் ஜார்ஜ் அவர்களுக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று மாறியபோது, ஜார்ஜ் அவர்கள் சசிகலா அணிக்க் ஆதரவாக செயல்பட்டதாகவும், அந்த விசுவாசத்திற்காக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜ், டிஜிபியாக பதவியுயர்வு பெற்றால் அவருக்கு பதிலாக சென்னை மாநகர கமிஷனராக சஞ்சய் அரோரா நியமிக்கப்படலாம் என்ற செய்தி பரவி வருகிறது.

அதேபோல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன், சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து சென்னை ஜெயிலுக்கு மாற்றுவது குறித்த நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் இவர் வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த  அறிவிப்பு மிக விரைவில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டுப்பாடம் செய்யாத மகனை நடுத்தெருவில் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த தந்தை