Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடி ஆட போகும் ஓபிஎஸ்; விட்டுக்கொடுப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (15:10 IST)
அதிமுக கட்சியிலிருந்து விலகுவதாக தினகரன் அறிவித்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அமைச்சர்களும் ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளனர்.


 

 
அதிமுக கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டதாக டிடிவி தினகரன் பேட்டியளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்போடு பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று கூறினார்.
 
நேற்று முதல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அமைச்சர்கள் ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று பேட்டி அளித்து வந்தனர். ஆனால் நேற்று ஓபிஎஸ் அணியினர் இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தனர்.
 
தற்போது பன்னீர்செல்வம் மத்திய அரசின் முழு ஆதரவோடு பலமாக உள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். இதனால் அவர் தனது அதிரடி ஆட்டத்தை அதிரடியாக தொடங்குவார் என கூறப்படுகிறது.
 
உடைந்த இரு அதிமுக அணிகளும் இணைந்தால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை விட்டுக்கொடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments