Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த அனுமதி கிடைக்குமா?

Webdunia
ஞாயிறு, 9 மே 2021 (13:36 IST)
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு ஒன்று அளித்துள்ளது. 

 
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகிறது. ஆம், அதிமுக நிர்வாகிகள் இடையே நீண்ட நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. 
 
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாததால் வரும் 10 ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், தமிழகத்தில் மே 24 வரை, அதாவது மே 10 ஆம் தேதி முதல் (வரும் திங்கட்கிழமை) மே 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் அதிமுக கூட்டம் நடைபெறுமா எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன. 
 
இந்ந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மனு ஒன்று அளித்துள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி அதிமுக மனு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments