Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பேரை காலால் மிதித்தே கொன்ற காட்டு யானை: மக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (13:27 IST)
கோவையில் 2 பேரை காட்டு யானை ஒன்று தும்பிக்கையால் அடித்தும் காலால் மிதித்தும் கொன்ற செய்தி பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

கோவை பன்னிமடை சஞ்சீவ் நகரை சேர்ந்த டிரைவர் கணேசன், என்பவரை ஒரு காட்டுயானை அடித்து கொன்றது. இதையடுத்து நேற்று இரவு தொப்பம்பட்டி என்னும் பகுதியில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கல்லூரி வழியாக இறங்கியுள்ளது காட்டு யானை. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்திக் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கி காட்டு யானை ஓடி வந்தது. இதை பார்த்த இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

ஆவேசமாக துரத்தி வந்த யானை, பிரேம் கார்த்திக்கை துதிக்கையால் சுழற்றி காலில் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிராம் உயிரிழந்தார். விக்னேஷ் தப்பித்து ஓடிவிட்டார்.

இரண்டு நாட்களில் இரண்டு பேரை யானை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வீசும் வெப்ப அலை.! இனி கோடையில் தேர்தல் வேண்டாம்..! தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கோரிக்கை..!!

100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்தது காங்கிரஸ்.. வெற்றி மீது அவ்வளவு நம்பிக்கையா?

பழங்குடியினருக்கு டிக்கெட் வழங்க மறுப்பு.! திரையரங்கம் மீது போலீசில் புகார்..!!

பிரதமர் மோடியின் திருவனந்தபுரம் பயண திட்டத்தில் மாற்றமா? என்ன காரணம்?

புனே சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்து.. ஒட்டுமொத்த குடும்பமும் சிறையில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments