Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயது வித்தியாசத்தால் மனைவி மீது சந்தேகம் - குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை

வயது வித்தியாசத்தால் மனைவி மீது சந்தேகம் - குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை
, புதன், 6 ஜனவரி 2016 (12:59 IST)
வயது வித்தியாசம் காரணமாக மனைவி மீது கணவன் சந்தேகமடைந்ததை அடுத்து, அந்த பெண் தனது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

 
சிதம்பரம் அருகே உள்ள அம்புபூட்டியபாளையம் கிராமத்தை சேர்ந்த புஷ்பநாதன் (46) ராணி (34) என்ற தம்பதியினருக்கு சஞ்சனா என்ற இரண்டு வயது பெண்குழந்தை உள்ளது. புஷ்பநாதன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் கடுமையாக சண்டை போடுவது வழக்கமாகும்.
 
மேலும் சூதாட்டத்திலும் ஈடுபட்டு மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள் கிழமை இரவு 8 மணியளவில் மனமுடைந்த ராணி, மகளை கட்டிபிடித்து கொண்டு தீயில் கருகி உயிரை விட்டுள்ளனர்.
 
தீ எரிந்து கொண்டு இருந்த போது கணவன் அவர்களை காப்பாற்ற முயற்சித்தபோது தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த கிள்ளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
ராணியும், அவரது மகளும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனரா? இல்லை கணவரே கொலை செய்துவிட்டு எரிக்க முயற்சி செய்தாரா? என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil