சிவகங்கை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவி வெட்டிக் கொன்றார்.
சிவகங்கை மாவட்டம் டி.வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டு தாக்கியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் மனைவி ராஜ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
கொலை செய்த ராஜ்குமாரின் மனைவி தலைமறைவாகி விட்டார். தற்போது அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.