Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவனுடன் வாழ முடியாததால் பெண் தற்கொலை

கணவனுடன் வாழ முடியாததால் பெண் தற்கொலை
, வியாழன், 7 ஜூலை 2016 (09:08 IST)
நெல்லை மாவட்டதில் கணவனுடன் சேர்ந்த வாழ ஆசைப்பட்டு, முடியாமல் போனதால் விரத்தில் அடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.



 

 
நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(32) என்பவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவர் அவரது மனைவி கோமதி(28) மற்றும் 7 மாத குழந்தையை ஊரில் விட்டு சென்னையில் வசித்து வருகிறார்.
 
அவரது மனைவி பிரசவ காலத்தில் இருக்கும் போதே ஊரில் கொண்டு போய் விட்டதுடன் சூழல் காரணமாக சிறிது நாட்கள் கழித்து சென்னைக்கு அழைத்து வருவதாக இருந்தார். ஆனால் கோமதி ராஜசேகரிடம் தன்னை அவருடன் சென்னைக்கு அழைத்து செல்லுமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.
 
இதற்கிடையில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் ராஜசேகர் சற்று சிறிது நாட்கள் கழித்து அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் சமாதானம் ஆகாத கோமதி இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் புலம்பியுள்ளார்.
 
இந்நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ முடியாத விரத்தியில் மனமுடைந்த கோமதி நேற்று மதியம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் கோமதி, ராஜசேகர் ஆகிய இருவருக்கு இடையே திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில் கோமதி தற்கொலை செய்து கொண்டதால், இச்சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது தான் என் கடைசி முத்தம்: காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் உருக்கமான கடிதம்