Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டரை தூக்கி அடித்ததில் மனைவி பலி! தூக்கில் தொங்கிய கணவன் ...

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (13:24 IST)
கோவை மாவட்டம் அடுத்த வேடப்பட்டியில் வசித்துவந்தவர் மாரிமுத்து(65).இவர் பூ மார்கெட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்துவந்தார். இவருடன் சுப்பாத்தாள் (60)மனைவி (இரண்டாவது மனைவி) வசித்துவந்தார். 
இந்தத் தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்று தெரிகிறது.  இவர்கள் இருவருடன் மாரிமுத்துவின் தம்பி கிருஷ்ணனும் வசித்துகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனபதால் வீட்டிலேயே இருந்தார்.
 
இந்நிலையில் நேற்று அதிகாலையில் தம்பதியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சுப்பாத்தாள் தூங்கச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் மாரிமுத்து தூங்கிக்கொண்டிருந்த சுப்பாத்தாள் மீது சமையல் சிலிண்டரை தூக்கி வீசி அடித்தார். இதில் சுப்பாத்தாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
பின்னர், குற்றவுணர்ச்சி  மேலிட்ட மாரிமுத்து தன் வீட்டு வாசலிலேயே பந்தலில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். 
 
மனைவியைக்கொன்று கணவன் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments