Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகவலைதள மோகத்தில் கணவன் – மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு !

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (10:29 IST)
திருப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருப்பூரில் வசித்து வந்த தம்பதிகள் சக்திவேல் மற்றும் ரேணுகா. இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமனம் செய்துகொண்டு திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்வில் சமூகவலைதளங்களால் விரிசல் எழ ஆரம்பித்துள்ளது.

கணவ சக்திவேல் தன் மேல் அன்பாக இல்லாமல் சமூகவலைதளங்களிலேயே எந்நேரமும் மூழ்கியிருந்ததாக ரேணுகா அடிக்கடி அவரிடம் குறைபட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத சக்திவேல் சமூகவலைதளங்களே கதி என்று இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா தேவி சக்திவேல் வீட்டில் இல்லாத நேர
z
த்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக்கொண்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments