Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியை தாலிக் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்த கணவர்

மனைவியை தாலிக் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்த கணவர்
, வியாழன், 27 நவம்பர் 2014 (17:01 IST)
மதுரை அருகே தாலிக் கயிற்றால் தனது மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மதுரை மாவட்டம் கொடிமங்களத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் விவசாய வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி 35 வயதுடைய அழகு. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
முருகன் குடித்துவிட்டு போதையுடன் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
 
இதே போன்ற தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த முருகன் மனைவியை அவரது தாலிக் கயிற்றால் இறுக்கியுள்ளார். தாலிக்கயிறு கழுத்தை இறுக்கியதுடன், கழுத்தை அறுத்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அழகு உயிரிழந்தார்.
 
இந்தச் சம்பவத்தை அறிந்ததும் நாகமலைப் புதுக்கோட்டை காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அழகுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
மேலும், மனைவியைக் கொலை செய்த முருகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil