Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதத்திற்கும் மேல் குளிக்காத கணவர்.. திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கேட்ட மனைவி..!

Mahendran
திங்கள், 16 செப்டம்பர் 2024 (15:12 IST)
ஆக்ராவில், திருமணத்தின் 40 நாட்களுக்குப் பிறகு, கணவரின் வினோதமான குளியல் பழக்கத்தை காரணமாகக் கொண்டு, ஒரு பெண் விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணமாகி ஒரு மாதம் கழித்து, கணவரின் சுகாதார பழக்கம் குறித்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பெண் விவாகரத்து கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே குளிப்பதாகவும், இதனால் உருவாகும் துர்நாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாததால், மனைவி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
 
அந்த நபரான ராஜேஷ், வாரத்திற்கு ஒருமுறை புனித கங்கை நதியில் இருந்து வந்த தண்ணீரை (கங்காஜல்) தெளித்துக் கொள்வதைதான் சுத்தம் செய்து கொள்ளும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மனைவியின் அடிக்கடி வற்புறுத்தலால், திருமணமான 40 நாட்களில் அவர் 6 முறை மட்டுமே குளித்துள்ளார். இந்தத் தகராறின் பின்னர், மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி விட்டார். இதனிடையே, அவர்களின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் என புகார் அளித்து, விவாகரத்து கோரியுள்ளனர்.
 
கணவர் பின்னர் தன்னுடைய சுகாதார பழக்கத்தை மாற்றியமைக்க மனம் திருந்தியிருந்தாலும், மனைவி அவருடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நீதிமன்றம் இத்தம்பதியருக்கு ஒருவாரத்திற்கு கவுன்சிலிங் சென்டரில் கலந்துரையாட ஆலோசனை அளித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரது? பசங்களுக்கு பஸ்ஸை நிறுத்தாம போனது? - மாணவன் புகாரில் அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

விஐபி தரிசனத்திற்கு தடை செய்ய மனு தாக்கல்: வழக்கை விசாரணை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்..!

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

வேங்கை வயல் வழக்கு.. வேறு நீதிமன்றத்திற்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. நாடாளுமன்றத்தில் பெரும் அமளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments