Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்த மனைவி கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்த மனைவி கைது
, புதன், 15 ஜூன் 2016 (11:36 IST)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி(வயது 37). இவரது மனைவி சங்கீதா(30). திருச்சியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தவறுதலாக சங்கீதா செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்தாராம். இது இருவருக்கும் கள்ளகாதலை உருவாக்கியது. இருவரும் நெருங்கி பழகி வந்ததை அறிந்த ரஜினி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத சங்கீதா தொடர்ந்து பிரபாகரனை சந்தித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரஜினியின் கழுத்தை மர்ம நபர்கள் கத்தியால் அறுத்துள்ளனர். ஆனால் ரஜினியின் கூச்சலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஜினி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் அவரது மனைவிக்கு,பிரபாகரனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தனது கள்ளகாதல் விவகாரம் கணவனுக்கு தெரிந்ததால் இனி மகிழ்ச்சியாக இருக்க முடியாது என கருதிய சங்கீதா, கள்ளக்காதலன் பிரபாகரனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 5 பேருக்கு பிடிவாரண்ட்