Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்றொரு நோயாளிக்காக கணவரின் ஆக்ஸிஜன் குழாயை எடுத்து கொன்று விட்டனர்… கதறி அழுத மனைவி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (09:16 IST)
கோப்புப் படம்

கடலூரில் கொரோனாவால் சிகிச்சைப் பெற்றுவந்த நபருக்கு ஆக்ஸிஜன் குழாய் எடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர். இவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் ஆக்ஸிஜன் குழாய் மூலமாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தான கட்டத்தில் வந்த மற்றொரு நோயாளிக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக தனது கணவரின் குழாயை மருத்துவர் நீக்கிவிட்டார் என்றும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணவர் இறந்துவிட்டதாகவும் ராஜாவின் மனைவி குற்றம் சாட்டினார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர் ரமேஷ் ‘உணவு கொடுப்பதற்காக நோயாளிகளின் ஆக்ஸிஜன் குழாய் எடுக்கப்படுவது உண்டு. அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் அரசு..!!

புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்..! ரவுடிகளுக்கு காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள்..! சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments