Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:07 IST)
அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? என விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி. 

 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வில் விலக்கு பெற கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
 
இந்நிலையில் நீட் விலக்கிற்கு ஆதரவாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுபள்ளி மாணவர்களுக்கு கேட்காமலே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது. யாருமே கேட்காத சூழலில் மாணவர்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என்ற நிலைபாட்டில் அதிமுக அனைத்து காலகட்டத்திலும் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? என விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு வந்தது எப்போது என்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments