Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தேர்தல் ரத்து ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (08:59 IST)
திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த தேர்தல் ஆணையம் இன்று திடீரென தேர்தல் ரத்து என அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கான காரணத்தை தேர்தல் ஆணையம் தற்போது விளக்கியுள்ளது. கஜா நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கும் வகையிலும், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது என்பதாலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாகவும் அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தலை ரத்து செய்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆக, தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு ஒரு முக்கிய காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தல் ரத்து செய்யப்படும் என தெரிந்தே அதிமுக, தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது தற்போது அனைவருக்கும் புரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments