Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பீப்' பாடலுக்கு போராடிய மகளிர் அமைப்பினர் எங்கே போனார்கள்? - டி.ராஜேந்தர் கேள்வி

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (10:26 IST)
சில மாதங்களுக்கு முன், 'பீப்' பாடலுக்கு எதிராக போராட்டம் நடத்திய மகளிர் அமைப்பினர், சுவாதி கொலையைக் கண்டித்து ஏன் போராடவில்லை என நடிகர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
தண்டையார்பேட்டையில் லட்சிய திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டி.ராஜேந்தர், ”லட்சிய திமுக, அரசியலில் இதுவரை ஒதுங்கி இருந்தது. இனி வரும் காலங்களில் அப்படி இருக்காது. உள்ளாட்சி தேர்தலில், இளைஞர் பட்டாளத்துடன் போட்டியிடுவோம்.
 
சில மாதங்களுக்கு முன், 'பீப்' பாடலுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த மகளிர் அமைப்பினர், தற்போது எங்கே போனார்கள்?
 
பொது இடத்தில், சுவாதி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ஏன் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மீண்டும் எந்தவொரு பெண்ணுக்கும், இந்த நிலை ஏற்படக் கூடாது” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments