Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் விற்பனையை நிறுத்தும் அரசு டாஸ்மாக் விற்பனையை நிறுத்துமா?

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (19:43 IST)
தேர்தலை காரணம் காட்டி ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளதற்கு  தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
தேர்தல் காரணமாக ஆன்லைன் சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் இன்று மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட தேர்தல் அதிகாரி இதுகுறித்து விரைவில் முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
 
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தேர்தலை காரணம் காட்டி மணம் விற்பனையை நிறுத்தும் அரசு, டாஸ்மாக் விற்பனையை நிறுத்துமா' என்ற கேள்வி எழுப்பினர். மேலும் மணல் விற்பனையை நிறுத்தியதால் கட்டுமான தொழில் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், அந்த தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளிகள் சிரமம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments