Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு தெரிவித்த எதிர்ப்பை அமித்ஷாவுக்கு தெரிவிக்காத ஏன்? எங்கே போனார்கள் போராளிகள்?

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (07:32 IST)
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் 'கோபேக் மோடி' என்றும் என்று கூறி டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் படுத்தும் புரட்சிப் போராளிகள் நேற்று உள்துறை அமைச்சா் அமித்ஷா சென்னை வந்தபோது காணாமல் போனது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
மேலும் பிரதமர் மோடிக்கு கருப்பு பலூன் பறக்கவிட்டு அதகளம் செய்த போராளிகள் எங்கே போனார்கள் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு சென்னை வந்துள்ள அமித்ஷாவுக்கு எந்தவித எதிர்ப்பும் தமிழக மக்களிடம் இருந்து கிளம்ப வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் விவகாரத்தை கடுமையாக எதிர்த்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கூட அமித்ஷாவின் வருகைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரதமர் மோடிக்கு சர்வசாதாரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் போராளிகள், அமித்ஷாவுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பம்மிக் கொண்டு இருப்பது ஏன்? என்ற கேள்வி நெட்டிசன்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments