Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு: 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏன்?

Webdunia
புதன், 15 மே 2019 (21:33 IST)
தேனியில் வரும் 19ஆம் தேதி இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அங்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்றிருப்பதாகவும், அவை எதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேனி தொகுதியில் போட்டியிடும் பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
தேனியில் 2 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 30 விவிபாட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், ஏற்கனவே இந்த தொகுதிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், இதற்கெல்லாம் என்ன கணக்கு என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது
 
மேலும் எத்தனை வாக்கு இயந்திரங்களை மாற்றினாலும் ஓபிஎஸ் மகன் தோல்விதான் அடைவார் என்றும், வாக்கு இயந்திரங்கள் எதற்கு மாற்றப்படுகிறது என கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை என்றும், இந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது பற்றி ஆட்சியர் விளக்கம் தர வேண்டும் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் தரப்படும் என்றும் இந்த தொகுதியின் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments